Monday, October 3, 2011

மைக்கேல் சௌல் டேல் - 'DELL'

மைக்கேல் சௌல் டேல்
சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை.
எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப அம்மாவும் அப்பாவும் ஒப்புக் கொள்ளவில்லை.
அந்தத் தேர்வை எழுதிவிட்டால் பள்ளியிறுதி வரை படிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் டெல் வகுப்பறைச் சூழலில் வளர வேண்டிய அவசியத்தை பெற்றோர் உணர்ந்திருந்தனர்.
எனவே, பள்ளியில் படிக்கும் நேரம் போக, பகுதி நேரத் தொழிலபதிபராக உருவாகிக் கொண்டிருந்தார் டெல்.
பதினான்காவது வயதில் டெல் ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார். தட்டிப் பழகியதுடன் விட்டுவிடவில்லை. கம்ப்யூட்டரின் பாகங்களைத் தனித்தனியாகக் கழற்றி, பிரித்து மேய்ந்து, மறுபடி மாட்டும் வித்தையைக் கற்றிருந்தார்.
பள்ளி மாணவராக இருந்தபோதே ஹுஸ்டன் போஸ்ட் பத்திரிகை விநியோகப் பொறுப்பை ஏற்ற டெல், பல புதுமைகளைப் புகுத்தினார். புதுமணத் தம்பதிகளின் பட்டியலை வாங்கி, முதலில் இலவசமாகத் தந்து பின்னர் சந்தா கேட்டு, தன் வருமானத்தை 18,000 டாலர்களாக உயர்த்தினார்.
1983இல், ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் டெல் சேர்ந்த போது அவர் மருத்துவர் ஆவார் என்பது அவருடைய பெற்றோர்களின் கனவாக இருந்தது. ஒரு மருத்துவருக்குரிய கூர்மை டெல்லிடம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த கவனம் குவித்ததென்னவோ உடல்பாகங்களில் இல்லை…
உதிரி பாகங்களில்தான்.
தான் வாங்கிய கம்ப்யூட்டரைக் கழற்றி மாட்டியபோது 3000 டாலர்கள் விலையுள்ள அதன் மொத்த மதிப்பே 600 டாலர்கள்தான் இருக்கும் என்பது டெல்லுக்குத் தெரிந்தது. இதனை டீலர்கள் 2000 டாலர்களுக்கு வாங்கி 3000 டாலர்களுக்கு விற்கிறார்கள். டீலர்களைத் தவிர்த்து விட்டால் குறைந்த விலைக்கே கம்ப்யூட்டர்களை விற்க முடியும் என்று டெல் தெரிந்துகொண்டார்.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த பொது அறையிலேயே இந்தத் தொழிலைத் தொடங்கினார் டெல். அவர் தங்கி இருந்த 27வது மாடிக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினார்கள். இதற்கிடையே டெல்லின் மாத வருமானம் 250000 டாலர்களைத் தாண்டியது. தொழிலில் இன்னும் மும்மரமாக இறங்க வசதியாய், படிப்பைப் பாதியிலேயே விட்டார் டெல்.
டெல்லுக்கு வயது இருபதாகும்போது அவரிடம் முப்பது பேர் பணிபுரிந்து கொண்டிருந் தார்கள். 1987இல், பிசி அன்லிமிடெட் என்ற தன் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றம் செய்த டெல்லின் முழுப் பெயர், மைக்கேல் சௌல் டெல்.
1988இல், பொதுப்பங்குகளை விற்கத் தொடங்கியது டெல் நிறுவனம். அசுர வேகத்தில் வளர்ந்து வந்த டெல் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரை உருவாக்கியபோது போட்டியாளர்கள் இன்னும் சிறந்த மாடலை உருவாக்கியிருந்தார்கள். நிறுவனம் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனால் டெல் அசரவில்லை. அனுபவம் மிக்க புதிய மேலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். நிறுவனத்தை மறு சீரமைத்ததன்மூலம் லேட்டியூட் எக்ஸ்பி எனும் புதிய லேப்டாப் கம்ப்யூட்டரை டெல் நிறுவனம் உருவாக்கியது.
டெல் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாய் விற்பனை செய்ததுதான் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் அந்தப் பின்னடைவு நேரத்தில் இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய நினைத்தார் டெல். அதற்குள் நிறுவனம் பின்னடைவிலிருந்து மீண்டு விட்டது.
நேரடியாக தனிநபர்களுக்கு விற்பனை செய்வது என்ற நிலையிலிருந்து மாறி கல்வி நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் நேரடி யாக விற்பனை செய்யத் தொடங்கியது டெல் நிறுவனம்.
40 பில்லியன் டாலர்கள் விற்றுவரவும், 47000 ஊதியர் களுமாக டெல் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்து ஆசியா விலும் தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்தியது.
தொழில் நுட்ப நிலையில் அதிரடி மாற்றங்கள் தொடர் சங்கிலிகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகில் நிமிர்ந்து நின்று நிகரில்லா வெற்றியை எட்டினார் டெல்.
ரெப்ரிஜிரேட்டர் அளவிற்குப் பெரியதாக வந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர்களை மடியில் அடக்கும் மகத்துவத்துடன் உருவாக்கிய முக்கிய நிறுவனங்களில் முன்னணி நிறுவனம், டெல்.
கம்ப்யூட்டர் விற்பனை என்ற சராசரியான தொழிலை தங்கச்சுரங்கமாக மாற்றிய மகத்தான மனிதர் என்று எழுதியது எகனாமிஸ்ட் இதழ்.
ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தின் பாதையில் திருப்பங்கள் உருவாக்கிய சாமர்த்தியமான சாதனையாளர்களில் ஒருவராய் சரித்திரம் படைத்திருக்கிறார் டெல்.
அவரே ஒரு தனி மனித நிறுவனம் என்று சொல்வதுபோல் அவர் பெயரிலேயே அமைந்து இருக்கிறது அவருடைய நிறுவனம்.
-

Thursday, October 7, 2010

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!!!

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்



30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
 

 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)


 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்

 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்


   
15 கோடி வேலை தேடுவோர் 

 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்
 
 
 
மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி



அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்,


 
 

 



   

Tuesday, September 28, 2010

சர்தார் ஜோக் 1


பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.



3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி

Thursday, September 9, 2010

மனித உடல்: சில செய்திகள்

நன்றி labbaikudikadu.com மற்றும் செல்வி,

புதுடெல்லி: பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு.
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:

*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.
*குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.
*சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.
*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
*இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.
*கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
*சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.
*எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
*தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்.

Friday, August 27, 2010

நன்றி பனித்துளி சங்கர்

சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?